31 March 2026

ஆவியை மழைபோலே யூற்றும் பல

ஞா.கீ:137

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

137. இராகம்: அமிர்தகல்யாணி                         ஆதிதாளம்

 

                             பல்லவி

 

          ஆவியை மழைபோலே யூற்றும்,-பல

            சாதிகளை யேசு மந்தையிற் கூட்டும்.

 

                             அனுபல்லவி

 

                        பாவிக்காய் ஜீவனை விட்ட கிறிஸ்தே,

                        பரிந்து நீர் பேசியே இரங்கிடச் செய்யும். - ஆவியை

 

                             சரணங்கள்

 

1.         அன்பினால் ஜீவனை விட்டீர், - ஆவி

            அருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்;

            இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழ

            ஏராளமான ஜனங்களைச் சேரும். - ஆவியை

 

2.         சிதறுண்டலைகிற ஆட்டைப் - பின்னும்

            தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து,

            பதறாதே நான்தான் உன் பர்த்தாவாம்[1] யேசு

            பாக்கிய ரென்னும் நல் வாக்கையருளும். - ஆவியை

 

3.         சாத்தானின் கோஷ்டம்[2] அதிகம்; - அவன்

            தந்திரக் குணங்களின் சேஷ்டை அதிகம்;

            கர்த்தன் கிறிஸ்துவின் காயத்தினாலே

            கலகக் குணங்களை ஒழிந்திடச் செய்யும் - ஆவியை

 

4.         காத்திருந்த பல பேரும் - மனங்

            கடினங் கொள்ளா முன்னே உம் பாதஞ் சேரும்;

            தோத்திரக் கீதங்கள் பாடிப் புகழ்ந்து

            சுத்த லோகம் வரத் தூயாவி ஊற்றும். - ஆவியை

 

5.         தோத்திரக் கீதங்கள் பாடி - எங்கும்

            சுவிசேஷ ஜெயத்தையே நிதம் நிதம் தேடிப்

            பாத்திரராக அநேகரெழும்பப்

            பரிசுத்த ஆவியின் அருள்மாறி யூற்றும். - ஆவியை

 

 

- அருளானந்தம் பிரசங்கியார்



[1] மணவாளன்-நல்மேய்ப்பன்

[2] ஆரவாரம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...