ஆனந்த
தைல அபிஷேகத்தால்
ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே
1. கர்த்தருக்குள் மகிழ்ச்சியே எந்தனின் பெலன்
தேவனுக்குள் மகிழ்வதே எந்தனின் ஆவல்
எப்போதும் சந்தோஷம் சமாதானமே
திராட்சை ரசத்தின் நேசம் பொங்கி வழியுதே
2. ஸ்தோத்திரத்தின் மகிழ்ச்சியால் பூரிப்படைந்தால்
துன்பம் துக்கம் எல்லாமே ஓடிப் போகுமே
பரலோக சந்தோஷம் அனுபவிக்கவே
பரலோகத்தின் அன்பு ஊற்றப்பட்டதே
3. ஆட்டுக்குட்டி கலியாண நாளும் வந்தது
மணவாட்டி தன்னையே ஆயத்தம் செய்தாள்
களிகூர்ந்து துதிகள் போற்றிப் பாடுவோம்
நேசரவரின் மார்பில் நித்தம் மகிழுவோம்
No comments:
Post a Comment