94. இராகம்: யமுனா கலியாணி. தாளம்: ரூபகம்.
பரிசுத்த பர்த்தொலொமேயுவின் திருநாள் - ஆகஸ்று 24ஆம் நாள்
“ஆசையாகினேன் கோவே” - என்ற மெட்டு
பல்லவி
ஆரையா பெருமானே - எனக்
கறிவு
தாரும் பூமானே.
அனுபல்லவி
தீரையா
வினை வேறே யார்துணை
சின்மயா
- தேவ - தன்மையா. - ஆரையா
சரணங்கள்
1. பர்த்
தொலொ மேயு திருநாள் - வரப்
பார்த்
திருந் தேன் நான் வெகு நாள்
நர்த்தன
மொடு பாட - அந்த
நாத்தானியேலும்
ஆட - ஆரையா
2. கானா
வூரில் பிறந்தோன் - யாரும்
காணா
மற் செபம் புரிந்தோன்
ஏனோ
மோசே தீர்க்க-தரிசி
எழுத்தாம்?
என்ன-கருத்தாம்? - ஆரையா
3. நாச
ரேத்தில் நன்மை - யுண்டோ
நயந்து
கொள்ளும் தன்மை
பேச
வந்தீர் பிலிப்பே - அவர்
பேரும்
- இயேசு - சிரிப்பே - ஆரையா
4. வந்துமே
பார்த்திடு தம்பி - அப்போ
வசைசொல்லமாட்டாய்
நம்பி
எந்தை
இயேசு கிறிஸ்து - எனக்க
எசமான்
- இரட்சா - பெருமான் - ஆரையா
5. முணக்க
முடனே நாத்தான் - வந்து
முணுமு
ணென்றுமே பார்த்தான்
வணக்க
முடனே பணியு - முன்னே
வரைந்தார்
- வாக்குப் - பறைந்தார் - ஆரையா
6. உத்தம
இசரவேலன் - உயர்
அத்திம
ரத்தின்கீழ் சீலன்
கர்த்தன்
கிறிஸ்து உரைக்கக் - காட்சி
கண்டான்
- மாட்சி - கொண்டான் - ஆரையா
7. ரபியே
நீர்தேவ சுதனே - இசரேல்
ராசாதி
ராசனுந் தானே
தவிதி
றைவனீர் தவமே யுமகன்
நானே
- பாவி - நானே - ஆரையா
8. இந்தியா
மார்க்கம் வரவே - நாத்தான்
எங்கணும்
சாட்சி யுறவே
அந்திய
காலம் தோலை யுரித்து
அறைந்தார்
- குரு - சறைந்தார் - ஆரையா
9. சிலுவை
யிலிருந் திறக்க - உயிர்
திரும்ப
வும்வந்து பிறக்க
அலகை
மனுடன் உலக வாளால்
அறுத்தான்
- சிர - சறுத்தான் - ஆரையா
-
S. உவால்டர் கவிராயர், தென்மலை.
No comments:
Post a Comment