ஆவியின்
அருள்மழை பொழியட்டும்
அபிஷேகத்தால் உள்ளம் நிரம்பட்டும்
நிரப்பும் தேவா நிரப்பும்
தேவா
இப்போதே என்னையும் நிரப்பும்
தேவா
1. ஜலத்தின் மேல் அசைவாடின ஆவியே
நீச்சல் ஆழத்தில் என்னை அழைத்து செல்லுமே
2. அன்னிய பாஷை தருகின்ற ஆவியே
ஆண்டவரோடு பேசிட அழைத்துச் செல்லுமே
3. எனக்காக வேண்டுதல் செய்யும் ஆவியே
என் விண்ணப்பத்தை எடுத்து சொல்லி பதில்
தாருமே
4. பெந்தேகொஸ்தே நாளில் வந்த ஆவியே
என் பாவங்களை சுட்டெரித்து தூய்மையாக்குமே
5. உலர்ந்த எலும்பை ஒன்று சேர்க்கும் ஆவியே
சேனையாய் நின்றிட வல்லமை தாருமே
6. மண்ணான சாயல் கொண்ட சரீரம்
மகிமையின் சாயலாய் மாற வேண்டுமே
No comments:
Post a Comment