27 March 2026

ஆரையா அங்கே போகிறது என்னருமை ரட்சரோ

பாடல்

To Download Txt Lyrics file

 

 

1)       ஆரையா அங்கே போகிறது என்னருமை ரட்சரோ

            முள்முடி சிரசில் வைத்து முந்தில் ரத்தம் வடிய

 

2)         பாவிகளை ரட்சிக்க வந்த பரலோக ராஜனல்லோ

            பாரசிலுவை சுமந்து பணிவாகப் போறாரோ

 

3)         அப்பா சீமோனே ஆரென்றும் கேளாமல்

            அம்மா சிலுவையை சுமந்து போ சீமோனே

 

4)         ஜீவனின் அதிபதியிவர் தேவாதி தேவனல்லோ

            மாசற்ற அதிபதியிவர் மாசற்ற தேவாடு

 

5)         எருசலேம் வீதிகளில் இன்பமுடன் போதிப்பித்த

            பரிசுத்தமுள்ள பாக்கியவான் தாயாரே

 

6)         கலிலேயா ஸ்திரிகளே கண்ணீர் சொரிந்திடுங்கள்

            ஓடிவந்து அழுங்கள் உண்மையுள்ள மீட்பர் போறார்.

 

7)         அவன் பாரி ஆளனுப்பி பலவாக எச்சரித்தும்

            எச்சரிப்பின் வார்த்தையை கேளாமல் தான் கெட்டான்.

 

8)         தண்ணீரை அள்ளி தனது கரங்கழுவி

            ஜனங்களின் பேரில் சாற்நினான் குற்றத்தை

 

9)         குற்றமில்லை என்று முன்னே கூறிய நீதி தப்பி

            குற்றமில்லா ரட்சகரை கொலை செய்யவே துணிந்தான்.

 

10)       பிலாத்து துறை தன் மனைவி பிரியமுடன்

              இராத்திரி சொப்பனத்தினால் மிகப்பாடு பட்டே

 

11)       பொருள் யாவும் காக்கும் புயபெலனைக்கொன்றும்

              பரபாசை விட்டுவிட பாதகர்கள் கேட்பார்கள்.

 

12)       மலடிகளே பாக்கியர்கள் மானிலத்தில் நான் பாவி

             அலை போல் வருகுதையா ஆபத்தாம் என்றழுதீர்.

 

13)       பச்சைமரம் இப்பாடு படநேரமானர்க்கால்

              பச்சையற்ற பட்டமரம் எப்பாடனு பவிக்கும்

 

14)       வடக்கு தெருவாரே வடநாட்டு வீதியாரே

             என் மகன் யேசுவை இங்கு வரக்காணிரோ

 

15)       கானோம் மரியம்மாள் எங்கள் கண்ணான யேசுபரன்

              பாடுபட்டு போன எங்கள் பாக்கியவான் தாயாரே

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...