ஆழ்கடலிலே
மீன்கள் பலவுண்டு
அதையும் பிடித்திட மீனவர் பலவுண்டு
அழியும் ஆத்துமாக்கள் உலகில் பலவுண்டு
அதற்காய் பரிதவிக்க இங்கே யாருண்டு
யாரை அனுப்புவேன்
யார் என் வேலையாய் போவான்
1. அலையைப் போலவே அலைந்து திரிந்திடும்
அமைதியை இழந்து அதிருப்தி அடைந்திட
அநேகம் பேருண்டு அழைத்திட யாருண்டு
அநேகம் பேருண்டு மீட்டிட யாருண்டு
அநேகம் பேருண்டு மீட்டிட நீ உண்டு
2. சிலுவை அன்பினை சற்றும் அறியாமல்
சிந்திய ரத்தத்தின் மகத்துவம் உணராமல்
ஜீவிக்கும் மக்களை நேசிக்க யாருண்டு
ஜீவனைக் கொடுத்தவர் இயேசுவே தாணுண்டு
ஆண்டவர் இயேசுவை அறிவிக்க யாருண்டு
ஆண்டவர் தேடிடும் மனிதன் நீ உண்டு
- சுரேஷ் ஃபிரெடரிக்
No comments:
Post a Comment