ஆனந்தம்
பொங்கி வழியுதே
அல்லேலூயா துதி பாடுகையில்
வானம் திறந்து இறங்கிடுதே
வல்ல ஆவி எந்தன் உள்ளத்திலே
போற்றுவோம் புகழ்வோம் தேவனே
சாற்றுவோம் சரணம் ராஜனை
1. பரலோக ராஜாதி ராஜனை
பாவ பரிகார தேவனை
பரிசுத்த அன்பு ராஜனை
பரவசமாகவே துதிப்போமே
2. பாவமில்லா இரத்தம் சிந்தினாரே
பாவ பரிகாரி ஆனாரே
சாப ரோகம் நீக்கினாரே
சந்தோஷம் சமாதானம் அருளினாரே
3. எண்ணம் வார்த்தை ஆகு முன்னே
சிந்தை செயலாய் மாறு முன்னே
திண்ணமாய் எனக்கு செய்திடும்
தெய்வத்தைப் போற்றி புகழ்வோமே
4. ஏவல் செய் தூதர்கள் காத்திருக்க
ஏன் அதற்காய் அஞ்ச வேண்டும்
காவல் செய் கணங்கள் சூழ்ந்திருக்க
களிப்போம் களிப்போம் களித்திடுவோம்
No comments:
Post a Comment