36. இராகம்: இந்துஸ்தான், பியாக். தாளம்: ஏகம்.
நாமாவளி
1. ஆனந்தப் பரனைத்
துதி செய்தால், வரும்
ஆனந்தம் பர மானந்தம்
2. தம்பா துங்கா தயாபரா
சம்பூ ரணா சம்பூரணா
3. ஓம் சதா தயை புரி பாலா
ஒருபர குருவே அனுகூலா.
4. தோத்திர கீர்த்தன சுவிசேடா
சாத்திரி போற்றிய சருவேசா.
5. செபசெப செபசெப மந்திரனே
சிங்கார மனுவேல் சுந்தரனே.
6. அருஉரு ஒருபர மகா தேவா
பாவிகள் கவனம் தாதாசீவா.
7. அடிமுடி விலனே அவதாரா
அற்புத நலனே அதிகாரா.
No comments:
Post a Comment