299.
பல்லவி
ஆரிடம் போவேன்
நான் அவதிகள் மிகுந்திடில்
ஆதரிப்பாய்
என்னை ஐயனே
அனுபல்லவி
பாரினில் உனையல்லால் பாவிக்கோர்
துணையுண்டோ
யாருமில் லையேகண் பாருமெனை
யென்நாதா - ஆரிடம்
சரணங்கள்
1. சித்தம் இரங்காதோ திருவுள்ளம் கனியாதோ
தினம் தினம் படும் பாடும் தீராதோ
அத்தனே என்பிழை அத்தனை யும்பொறுத்
தாண்டு இரட்சித் தருளுவாய் அன்பேஎன் ஆருயிரே
- ஆரிடம்
2. சோதனை யனுதினம் நூதனமாய் வருதெ
சொல்லி முடியாத் துயர் தருதே
நாதனே போகும் வழி ஏதும் காணேனே ஐயோ
வேதனே வெற்றி வழி விளங்கிடச் செய்திடாயோ
- ஆரிடம்
3. நிர்பந்த மனிதன்நான் நின் கிருபை யில்லையேல்
நெறிதவறி விழுந்து கெடுவேன்.
அப்பனே என் நிலை,கண் டெப்படியு மிரங்கி
ஒப்பிலாத் துணைசெய்யாய் உன்னைவிட் டெங்கு
போவேன் - ஆரிடம்
4. உண்மை குறையும், உலோகம் உரைத்திடும் தீர்ப்புகள்
உத்தம மாயிரா தென்றறிவேன்
எண்ண மெல்லாம் நிறுக்கும் அண்ணலுன் நிர்ணயத்தில்
என்ன குறைவுமின்றி ஏழையேன் காணச் செய்வாய்
- ஆரிடம்
No comments:
Post a Comment