ஆவியின்
மழையை பொழியும் நேரம்
என்ன பேரின்பம்
தூய தேவனின் சாயல் அடையும்
வேளை நெருங்கிடுதே அல்லேலூயா
1. ஆதி அந்தம் இல்லாத தேவா
உம்மைப் போற்றுகிறோம்
முன் குறித்தே முத்திரையிட்டீரே
எந்தன் துணை நீரே
நான் உந்தன் சொந்தம்
2. தூய ஆவி இறங்கிடும் வேளை
பாவம் விலகிடுமே
ஜீவிய பாதம் நேராக செல்ல
நல் வழி நடத்திடுமே
3. ஜெபத்தின் ஆவி இறங்கிடும் வேளை
ஜீவியம் மாறிடுமே
உள்ளம் உடைந்து உருகி ஜெபிக்க -2
தந்தேன் எந்தனையே உம்பாதம் வந்தேன்
No comments:
Post a Comment