ஆவியோடும்
உண்மையோடும்
ஆண்டவரை தொழுதிடுவோம்
பரிசுத்த அலங்காரத்துடனே நாமும்
பரிசுத்தரை தொழுவோமே
1. நடுக்கத்தோடும் பய பக்தியோடும் கர்த்தரில்
களி கூறுவோம்
பணிந்து குனிந்து தலைகள் தாழ்த்தி பாதம்
பணிந்திடுவோம் - 2
அவர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
பரிசுத்தரிடம் பாவமில்லையே - அவர்
பரிசுத்தம் எனக்கில்லையே - ஆவியோடும்
2. ஆர்வத்தோடு ஆனந்தத்தோடும் சந்நிதி வாருங்களே
கர்த்தரே தேவன் மகாராஜன் என்றே சொல்லுங்களே
- 2
அவர் வாசலில் துதியோடும் புகழ்ச்சியோடும்
வந்து கீர்த்தனம் பண்ணுங்களே
துதி பலிகளை செலுத்துங்களே - ஆவியோடும்
3. உதட்டிலல்ல உள்ளத்திலிருந்து ஸ்தோத்திர பலியிடுவோம்
ஒன்று கூடி ஒருமனமாய் பாடி புகழ்ந்திடுவோம்
- 2
அவரே தேவன் நாம் அவர் ஆடுகளே
அவர் சத்தியம் மேய்ந்திடுவோம்
அதில் என்றென்றும் நிலைத்திருப்போம் -
ஆவியோடும்
- S.J.C. Selvakumar
No comments:
Post a Comment