ஆவியானவரே
ஆற்றல் தருபவரே - 2
மணவாளரே துணையாளரே
மகிழ்ந்திட அசைவாடுவீர் மறுரூபமாக்கிடுவீர்
1. நீரின் மேல் நிலை நின்ற ஆவியே
நீர் தாமே என்னுள்ளம் அசைவாடுமே
வெறுமையை மாற்றிடவே
பரனே என்னில் தங்கிடுமே
2. ஜெப வேளை உம் பாதம் தேடியே
அபிஷேக பெலத்தோடு போராடுவேன்
உந்தனின் வல்லமையால்
நிறைந்தே நிதம் வாழ்த்திடுவேன்
3. பெலன் தாரும் திடன் தாரும் என் தேவனே
வளமான வாழ்வின் அடித்தளமே
மழை போல் பெய்திடுமே
கட்ட என் மேல் உம் நன்மைகளை
4. எலியாவை நிறைத்தீரே அபிஷேகத்தால்
எதிர்ப்போரை மேற்கொள்ள உம் பெலத்தால்
அக்கினி இறங்கினதோடு
அவரின் ஜெபம் கேட்டதுமே
5. வரம் தாரும் பரிசுத்த ஆவியே
தரமான ஜீவியம் நடத்திடவே
சாட்சியாய் நிறுத்திடுமே
சகலமும் படைத்தாள்பவரோ
No comments:
Post a Comment