ஆவியானவரே
என்மேல் ஊற்றிடுமே
தாகத்தோடும்
பாரத்தோடும்
உந்தன் சமூகத்தில் வந்துள்ளோம்
நிரப்ப வேண்டும் நிரப்ப வேண்டும்
உந்தன் ஆவியை ஊற்றிடுமே
என் பாத்திரம் (நிரம்பி
-5) வழியட்டும்
1. ஆதி நாட்களில் நடந்தது போல்
இக்காலத்திலும் எங்களை நடத்தும்
எழுப்புதல் பற்றி எரிய
எங்களை பயன்படுத்தும்
2. ஆவியின் வரங்கள் எங்களுக்குள்
அதிகமாக வளர வேண்டும்
எழுப்புதல் பற்றி எரிய
எங்களை பயன்படுத்தும்
3. ஜெபத்தின் ஆவி எங்களுக்குள்
அதிகமாக ஊற்றிடுமே
முழங்காலில் கதறி ஜெபிக்க
அபிஷேகம் தாரும்
No comments:
Post a Comment