ஆலோசனை சொல்லும்
தேவா
அதிசயங்கள் செய்யும் ராஜா - 2
வழி என்ன தெரியவில்லை
எது நன்மை புரியவில்லை -
2
1. கண்களின் இச்சை என்னை
இழுத்துச் செல்லும் அழிவிற்கு
மனிதனின் ஆலோசனை
முடிந்து விடும் மரணத்தில் - 2 - வழி என்ன
2. காரிருள் சூழ்ந்ததினால்
கண்கள் மங்கிப் போனதே
பலவித யோசனையால்
தூக்கம் கலைந்து போகுதே - 2
விடிந்திடும்
நாள் எதுவோ
விடுதலை
தான் வருமே - 2 - ஆலோசனை
3. உன் ஆத்துமாவே நீ கலங்குவதும் ஏனோ?
உனக்குள் தியங்கி உருகுவதும் ஏனோ? - 2
கர்த்தரை
நோக்கியே தான்
காத்திருப்பேன்
காத்திருப்பேன்
இரட்சிப்பின்
தேவனையே
இன்னும்
நான் துதிப்பேன் - ஆலோசனை
- John & Vasanthy
No comments:
Post a Comment