ஆராதிப்பேன்
ஆண்டவரை
ஆவியோடும் உண்மையோடும்
மாறாத ஆனந்தம் குன்றாத பேரின்பம்
இயேசுவில் என்றும் உண்டு
நேசரண்டை வாருங்கள்
நேசத்தை ருசியுங்கள்
ஆவலாய் அழைக்கிறார் இதோ
1. ஆகாமியக் கூடாரம் வேண்டாம்
ஆலய வாசற்படியிலே
ஆனந்தம் பாடி நேசரைத் தேடி
ஆண்டவர் பாதம் பணிவோம்
2. ஆலோசனைக் கர்த்தர் அவரே
ஆலோசனை தந்திடுவாரே
பாதையைக் காட்டி கரம் பிடித்து
நேர் வழி நடத்திடுவார்
3. ஆட்டுக்குட்டி திரு ரத்தமே
பாவமற கழுவிடுமே
பாவங்கள் போக்கி சாபங்கள் மாற்றி
பரலோகம் சேர்த்திடுமே
No comments:
Post a Comment