ஆவியே
என்னை நடத்தும்
தூய்மையை என் வாழ்விலே
அருளும்
வேதம் சொல்லும் பாதை
செல்ல - 2
தேவ ஆவியை அருளும்
1. எந்தன் இருள் நீங்க
உந்தன் அருள் வேண்டும்
உம் சாயல் நான் காண வேண்டும்
பாவ எண்ணங்கள் கொண்ட உள்ளம்
பரிசுத்தமாய் மாற வேண்டும்
உம்மைக் காணும் கண்கள் வேண்டும்
உம்மோடு நான் வாழ வேண்டும்
உம் போல நான் மாற வேண்டும்
2. அந்தகார இருள் நோக்கி செல்லும்
மாந்தர்கள் உம்மைக் காண வேண்டும்
உந்தன் மீட்பை இந்த பூமி
எங்கெங்கும் நான் கூற வேண்டும்
உந்தன் திரு வார்த்தை சொல்லும் வரம்
யாவும்
என் வாழ்வில் நான் காண வேண்டும்
மாறாத உம் அன்பும் வேண்டும்
- Vincent
selvakumaar
No comments:
Post a Comment