ஆராதனைக்கு
உரியவரே - உம்மை
ஆராதனை
செய்கிறோம்
துதிகளுக்கு பாத்திரரே - உம்மை
ஆராதனை செய்கிறோம்
வாழ்க ராஜா இயேசு ராஜா
1. வானமும் பூமியும் படைத்த தேவன்
சர்வ வல்லவர் நீர்தானைய்யா
எல்லாவற்றிலும் மேலானவரே
மகிமைக்கு நீர் பாத்திரரே
2. கேருபீன் சேராபீன் தூதர்கள் கூட்டம்
வாழ்த்தி வணங்கும் தூயவரே
துதிகள் மத்தியில் வாசம் செய்யும்
துதிகளுக்கு பாத்திரரே
3. சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்
பதினாயிரங்களில் சிறந்தவரே
அகிலம் அனைத்தையும் ஆளுகை செய்யும்
ராஜாதி ராஜாவே ஆராதிக்கிறோம்
No comments:
Post a Comment