ஆராதனை உமக்குத்தான்
ஆனந்த துதிபலி உமக்குத்தான்
மகிமையும் உமக்குத்தான்
மாட்சிமையும் உமக்குத்தான்
எல்லாம் உமக்குத்தான்
என் இயேசுவே உமக்குத்தான்
1. தாயுள்ளம் கொண்ட தயாபரரே
தாங்கி அணைத்தீர் என்னையுமே
இரக்கமும் உருக்கமும் நிறைந்தவரே
எனக்குள்ளே என்றென்றும் வாழ்பவரே
2. தந்தையை போலே தோள் மீது
தினமும் என்னை சுமந்தவரே
உள்ளங்கையில் என்னை வரைந்தவரே
ஒவ்வொரு நாளும் காப்பவரே
3. ஜீவ நதியாய் என் உள்ளத்தில்
தாகம் தீர்க்க வந்தவரே
கன்மலை தேனினால் என்வாழ்வை
திருப்தியாக்கி மகிழ்பவரே
No comments:
Post a Comment