ஆவியின்
வரங்களை அறிந்திடுவோம்
ஆண்டவர் வழிகளில் நடந்திடுவோம்
1. இயேசுவை
ஆண்டவர் என ஏற்போர்
மாசற
ஆவியின்
அருள்பெற்றோர்
- அவர்
தாசராய்
வாழ்ந்திட துணிந்திடுவார்
பாசமாய்
என்றுமே பணிபுரிவார்
2. வரங்களில்
பற்பல வகை உண்டு
பரமனே
அவரவர்க்
களிப்பதுண்டு
- என்றும்
திறமுடன்
அவைகளை வாழ்வினிலே
பிறர்
நலம் கருதியே பேணிடவே
3. யாவிலும்
சிறந்த நல் வழியறிவோம்
பாரினில்
அதுவே
அன்பென்போம்
- அது
சாவினைச்
சிலுவையில் வென்றதுவே
சாவிலும்
அழிந்திடாப் பண்பதுவே
No comments:
Post a Comment