Posts

Showing posts from April, 2022

ஏன் அழுகின்றாய் கண்ணே

Image
ஏன் அழுகின்றாய் கண்ணே மேலும் அதிக பாடல்களுக்கு       இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...   (F#- Maj  / 6/8 / T :88 )                     ஏன் அழுகின்றாய் கண்ணே? எதற்கழுகின்றாய் ?                         நிச்சயம் முடிவு உண்டு நம்பிக்கை வீண்போகாது (2)                         கண்ணீரை காண்பவர் கணக்கினிலே வைப்பவர்                         விதையாய் நினைப்பவர் விடுதலை அளிப்பவர் (2) - ஏன் அழுகின்றாய்   1.          அன்னாளும் ஜெபித்தாளே குழந்தையை பெற்றெடுத்தாள்             ஆகாரும் அழுதாளே ஊற்றினை கண்டறிந்தாள் (2)             உந்தனின் அழுகை மட்டும் அவர் சமூகம் எட்டாதோ             உன்னை அற்புதங்கள் என்றும் அவர் காணச் செய்வார் (2) - ஏன் அழுகின்றாய்   2.          யாக்கோபும் ஜெபித்தானே போராடி மேற்கொண்டான்             தாவீதும் அழுதானே இழந்ததை திருப்பிக்கொண்டான் (2)             உந்தனின் கெஞ்சுதலை அவர் செவிகள் கேட்காதோ (2)             உன்னை விடுவித்து என்றும் அவர் மகிழச் செய்வார் - ஏன் அழுகின்றாய்            

ஏன் அழுகின்றாய் யாரை நீ தேடுகின்றாய்

Image
ஏன் அழுகின்றாய் யாரை நீ தேடுகின்றாய் மேலும் அதிக பாடல்களுக்கு       இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...                          ஏன் அழுகின்றாய் ? யாரை நீ தேடுகின்றாய் ?                         ஏக்கம் போக்க இயேசு இருக்க                         ஏன் நீ அழுகின்றாய் ?   1.          கண்ணீர் பொங்கினதோ             கவனிப்பார் இல்லையோ             காருண்ய கர்த்தர் இயேசு இருக்க             ஏன் நீ அழுகின்றாய் ?   2.          பெற்றோர் கைவிட்டாரோ             பிள்ளைகள் பேணலையோ             யாரினும் மேலாய் காப்பவர் இருக்க             ஏன் நீ அழுகின்றாய் ?   3.          கனியற்ற மரமானாயோ             வெட்டிட சொல்லிட்டாரோ             களை கொத்தி உரமிட             உன்னதர் இருக்க             ஏன் நீ அழுகின்றாய் ?   - சகோ . A. தாமஸ்                   கிறிஸ்தவ பாடல் தொகுப்பு   PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்