ஏன் அழுகின்றாய் கண்ணே

ஏன் அழுகின்றாய் கண்ணே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

(F#-Maj / 6/8 / T:88)

                    ஏன் அழுகின்றாய் கண்ணே? எதற்கழுகின்றாய்?

                        நிச்சயம் முடிவு உண்டு நம்பிக்கை வீண்போகாது (2)

                        கண்ணீரை காண்பவர் கணக்கினிலே வைப்பவர்

                        விதையாய் நினைப்பவர் விடுதலை அளிப்பவர் (2) - ஏன் அழுகின்றாய்

 

1.         அன்னாளும் ஜெபித்தாளே குழந்தையை பெற்றெடுத்தாள்

            ஆகாரும் அழுதாளே ஊற்றினை கண்டறிந்தாள் (2)

            உந்தனின் அழுகை மட்டும் அவர் சமூகம் எட்டாதோ

            உன்னை அற்புதங்கள் என்றும் அவர் காணச் செய்வார் (2) - ஏன் அழுகின்றாய்

 

2.         யாக்கோபும் ஜெபித்தானே போராடி மேற்கொண்டான்

            தாவீதும் அழுதானே இழந்ததை திருப்பிக்கொண்டான் (2)

            உந்தனின் கெஞ்சுதலை அவர் செவிகள் கேட்காதோ (2)

            உன்னை விடுவித்து என்றும் அவர் மகிழச் செய்வார் - ஏன் அழுகின்றாய்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு