அதிகாலை
வெள்ளங்கி அணிந்த வானவர்
அதிசயமாய் கல்லை உருட்டினர்
அவருடன் நாமும் ஆர்ப்பரிப்போம்
அல்லேலூயா அல்லேலூயா இயேசு
உயிர்த்தார்
1. காவலரோ கலக்கத்தில் கண்ணிருண்டனர்
காண முடியா பேரொளி விண்ணில் தோன்றிட
காதடைக்கும் முளக்கமும் இடியொலியும்
கர்த்தர் காவல் முத்திரை உடைத்தெறிந்தனர்
- அதிகாலை
2. இருளான சாவின் திரை நீக்கப்பட்டது
இனிப்பாவி நித்திய வாழ்வின் சுதந்தரர்
இன்பமான தூதருடன் ஒன்று சேருவோம்
இங்கிதமாய் அல்லேலூயா என்று பாடுவோம்
- அதிகாலை
- மேரி லாசரஸ்
No comments:
Post a Comment