339. இராகம்: துஜாவந்தி ஆதி
தாளம்
பல்லவி
ஆறுதல் அடை,
மனமே;-கிறிஸ்துவுக்குள்
ஆறுதல் அடை, மனமே.
அனுபல்லவி
பாருள் பாவத்தால் வந்த பலனாம் மரண மதின்
கூரை அழித்த யேசு கொற்றவன் றனை நோக்கி.
- ஆறு
சரணங்கள்
1. நம்பிக்கை யற்றோரைப் போலே,-மரித்தோர்க்காக
நலிவதேன் ஒருக்காலே;
உம்பர்[1] கோன்
மேகத்தின் மேலே-தோன்றிடும் போ
துயிர்த்தெழும்புவ தாலே,
வெம்பிப் புலம்பி அழ வேண்டாம்; கிறிஸ்து
வெனும்
தம்பிரான் திருமொழிச் சாரத்தை ருசிபார்த்து.
- ஆறு
2. ஏசு வருவார்; வானத்தில்-தேவதூதர்கள்
எக்காளம் ஊதும் நேரத்தில்
காசிதனில் ஏசுவில்-மரித்தோர் எல்லாம்
கதித்துயிராகி மேகத்தில்
மாசறச் செல்ல, நாமும் மறு ரூபமாகிச் சென்று
சாசுவதமாய் என்றும் தற்பரனுடன் வாழ்வோம்
- ஆறு
3. ஜீவ நதிகள் ஓடுமே;-எருசலேமில்
திரளாய் ஜனங்கள் கூடுமே;
தேவ துதியைப் பாடுமே;-ஏசுகிறிஸ்தின்
ஜெயத்தைச் சொல்லிக் கொண்டாடுமே;
ஆவலுடனே நாமும் அதையே அடைவதற்கு
ஜீவ வசனந் தன்னைத் திடனாய்ப் பிடிப்போமாக.
- ஆறு
- மரியான் உபதேசியார்
No comments:
Post a Comment