ஆனந்தமே
ஆனந்தமே
ஆனந்தப் பண்டிகை ஆனந்தமே
- 2
1. ஆடு மாடுகள் கோழிகள் கொண்டு வந்தோம்
பல தானிய தவசங்கள் படைக்க வந்தோம்
காணம் உப்பு மூட்டை சோளமுடன் - 2
பலகார வகைகளும் படைக்க வந்தோம் - ஆனந்தமே
2. முதற்பலனாம் காணிக்கை தவசங்களை
கர்த்தர் பாதத்தில் படைத்தே பணிந்திடுவோம்
தோத்திர கீதங்கள் பாடிடுவோம் - 2
நம் இதயத்தில் இயேசுவை ஏற்றுக் கொள்வோம்
- ஆனந்தமே
3. எண்ணிலடங்கா நன்மைகள் நமக்குச் செய்தார்
என்று இறைவனின் நாமத்தை போற்றிடுவோம்
வாலிபர் சங்கத்தை வாழ்த்திடுவோம் - 2
என்றும் வளர்ந்திட ஆண்டவர் அருள் பெறுவோம்
- ஆனந்தமே
No comments:
Post a Comment