ஆளில்லை
ஆளில்லை
அழுது ஜெபிக்க ஆளில்லை -
2
செந்நீர் சிந்தி நேசர் ஜெபித்தார்
கண்ணீர் சிந்த ஆளில்லை -
2
1. சின்னஞ் சிறுவரை சித்ரவதை செய்து
வதைக்கும் கூட்டம் உண்டு - 2
கதறி துடிக்கும் பாலகர்க்காக
கண்ணீர் வடிக்க ஆளில்லை - 2 - ஆளில்லை
2. குடித்து வெறித்து அடித்து உதைக்கும்
கொடூர கூட்டம் உண்டு - 2
அழுதே வாழ்வை கழிப்போர்க்காக
அழுது புலம்ப ஆளில்லை - 2 - ஆளில்லை
3. தேவன் வருவார் கணக்கு கேட்பார்
எப்படி ஜெபித்தாய் என்பார் - 2
என்ன சொல்ல எப்படி சொல்ல
தலை குனிவோர் ஏராளம் - 2 - ஆளில்லை
- Eva. Michael Paul (Light of Truth Ministries)
No comments:
Post a Comment