இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய்


இன்றைத் தினம் உன் அருள் ஈகுவாய்

331. (16) சுருட்டி                                           சாபு தாளம்

பல்லவி

            இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய், இயேசுநாதையா;
            இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய்

அனுபல்லவி

            அன்றுன் உதிரம் நரர்க் கென்று சிந்தி மீட்டெனை
            வென்றியுடன் ரட்சித்த நன்றி போலே எனக்கு. - இன்

சரணங்கள்

1.         போன ராவில் என்னைக் கண் பார்த்தாய்,-பலவிதமாம்
            பொல்லா மோசங்களில் தற்காத்தாய்;
            ஈன சாத்தான் எனையே இடர்க்குள் அகப்படுத்தி,
            ஊனம் எனக்குச் செய்யா துருக்கமுடன் புரந்தாய்.[1] - இன்றை

2.         கையிட்டுக் கொள்ளும் என்றன் வேலை-யாவிலுமுன்றன்
            கடைக்கண் ணோக்கி, அவற்றின் மேலே,
            ஐயா நின் ஆசீர்வாதம் அருளி, என் மனோவாக்கு
            மெய்யால் நின் மகிமையே விளங்கும்படி ஒழுக. - இன்றை

3.         எத்தனையோ விபத்தோர் நாளே;-தஞ்சம் நீ என
            எளியேன் அடைந்தேன் உன்றன் தாளே;
            பத்தர் பாலனா, எனைப் பண்பாய் ஒப்புவித்தேன், உன்
            சித்தம் எனது பாக்கியம், தேவ திருக்குமாரா. - இன்றை

4.         பாவ சோதனைகளை வென்று, பேயுலகுடல்
            பண்ணும் போர்களுக் கெதிர் நின்று,
            ஜீவ பாதையில் இன்றும் திடனாய் முன்னிட்டுச் செல்ல
            தேவ சர்வாயுதத்தைச் சிறக்க எனக் களித்து. - இன்றை



[1] காப்பாற்றினாய்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு