கர்த்தாவே இப்போ உம்மைத் தொழுதோம்


Saviour again to Thy dear Name
Ellers

25                                                                                  10, 10, 10, 10

1.         கர்த்தாவே, இப்போ உம்மைத் தொழுதோம்
            ஓர்மித்தெழுந்து கீதம் பாடுவோம்;
            வீடேகுமுன் உம் பாதம் பணிந்தே
            உம் ஆசீர்வாதம் பெற்றுச் செல்வோமே.

2.         உம் சமாதானம் தந்து அனுப்பும்
            உம் நாளை முடிப்போமே உம்மோடும்;
            பாதம் பணிந்த எம்மைக் காத்திடும்
            எப்பாவம் வெட்கம் அணுகாமலும்.

3.         உம் சமாதானம் இந்த ராவிலும்;
            இருளை நீக்கி ஒளி தந்திடும்;
            பகலோ ராவோ உமக்கொன்றாமே
            எச்சேதமின்றி எம்மைக் காருமே.

4.         உம் சமாதானம் ஜீவ நாள் எல்லாம்;
            நீர் தொல்லை துன்பில் புகல் இன்பமாம்;
            பூலோகத் தொல்லை ஓய அழைப்பீர்,
            பேரின்ப வாழ்வை அன்பாய் ஈகுவீர்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு