சருவ லோகாதிபா நமஸ்காரம்


சருவ லோகாதிபா

5.       (29) சங்கராபரணம்                                         ஆதிதாளம்

1.         சருவ லோகாதிபா, நமஸ்காரம்!
            சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்!
            தரை, கடல், உயிர், வான், சகலமும் படைத்த
            தயாபர பிதாவே, நமஸ்காரம்.

2.         திரு அவதாரா, நமஸ்காரம்!
            ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்!
            தரணியின் மனுடர் உயிர் அடைந்தோங்கத்
            தருவினில்[1] மாண்டோய், நமஸ்காரம்.

3.         பரிசுத்த ஆவி, நமஸ்காரம்!
            பரம சற்குருவே, நமஸ்காரம்!
            அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும்
            அரியசித்தே சதா நமஸ்காரம்.

4.         முத்தொழிலோனே, நமஸ்காரம்!
            மூன்றிலொன்றோனே நமஸ்காரம்!
            கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,
            நித்ய திரியேகா, நமஸ்காரம்.
- ம. வேதமாணிக்கம்


[1]. மரத்தில்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு