16 July 2013

உம்மண்டை கர்த்தரே


Nearer my God to Thee
Horbary, Bethany

336                                                     6, 4, 6, 4, 6, 6, 4

1.       உம்மண்டை, கர்த்தரே,
                    நான் சேரட்டும்;
            சிலுவை சுமந்து
                        நடப்பினும்,
            என் ஆவல் என்றுமே
            உம்மண்டை, கர்த்தரே
                        நான் சேர்வதே.

2.         தாசன் யாக்கோபைப்போல்,
                        ராக் காலத்தில்
            திக்கற்றுக் கல்லின்மேல்
                        தூங்குகையில்,
            என்தன் கனாவிலே
            உம்மண்டை கர்த்தரே,
                        இருப்பேனே.

3.         நீர் என்னை நடத்தும்
                        பாதை எல்லாம்
            விண் எட்டும் ஏணிபோல்
                        விளங்குமாம்;
            தூதர் அழைப்பாரே
            உம்மண்டை, கர்த்தரே,
                        நான் சேரவே.

4.         விழித்து உம்மையே
                        நான் துதிப்பேன்;
            என் துயர்க் கல்லை உம்
                        வீடாக்குவேன்;
            என் துன்பத்தாலுமே
            உம்மண்டை, கர்த்தரே,
                        நான் சேர்வேனே.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...