27 October 2018

தீராத தாகத்தால்


248. Quam Dilecta, Dolomite Chant.         6s.

"I hunger and I thirst"

1.         தீராத தாகத்தால்
            என் உள்ளம் தொய்யுதே!
            ஆ! ஜீவ தண்ணீரால்,
            தேற்றுமேன், யேசுவே.

2.         விடாய்த்த பூமியில்
            சகாயம் செய்யுமேன்;
            நீர் போஷிக்காவிடில்,
            திக்கற்றுச் சாகுவேன்.

3.         தெய்வீக போஜனம்,
            மெய் மன்னா நீர் தாமே;
            விண்ணோரின் அமிர்தம்
            தாரும், என் நாயனே.

4.         மாசற்ற ரத்தத்தால்,
            எம் பாவம் போக்குவீர்;
            மெய்யாம் ஆகாரத்தால்
            என் நெஞ்சைப் போஷிப்பீர்.

5.         மா திவ்ய ஐக்கியம்
            இதால் உண்டாக்குவீர்,
            மேலான பாக்கியம்
            அன்பாக ஈகுவீர்.

6.         இவ்வருட் பந்தியில்
            ப்ரசன்னமாகுமேன்;
            என் ஏழை நெஞ்சத்தில்
            நீங்காமல் தங்குமேன்.

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...