224. Burford Abridge, Arcadia C.M.
"Alast and did my saviour bleed?"
1. மரித்தாரே
என் ஆண்டவர்,
சிலுவையில் தானே!
மரித்தாரே என் ரட்சகர்,
ஆ, எனக்காகவே.
2. மரத்தில் தொங்கி ஜீவனை
விட்டார் என் யேசுவே;
உனக்குத்தான் இப்பலியை
கொடுத்தார், பாவியே.
3. நான் எண்ணி எண்ணிவருகில்
என் நேசம் ஊக்கமாய்
கொழுந்துவிட்டு நெஞ்சத்தில்
எரியும் பக்தியாய்.
4. என் மீட்பர் யேசு க்றிஸ்து தாம்
இவ்வருள் செய்தாரே;
நான் என்ன பதில் செய்யலாம்?
தகுதி இல்லையே.
5. என் தேகம், செல்வம், சுகமும்
என் ஜீவன் யாவுமே
சுகந்த பலியாகவும்
படைப்பேன் யேசுவே.
No comments:
Post a Comment