இம்மட்டும் ஜீவன் தந்த


281. Arg                                                                                 7s.

"Nun lasst uns gehn und treten"

1.         இம்மட்டும் ஜீவன் தந்த
            கர்த்தாவை அத்தியந்த
            பக்தி விநயமாக
            பாடித் துதிப்போமாக.

2.         திக்கற்றவரைக் காரும்,
            நோயாளிகளைப் பாரும்,
            துக்கித்தவரைத் தேற்றும்,
            சாவோரைக் கரையேற்றும்.

3.         பரத்துக்கு நேராக
            நடக்கும்படியாக
            அடியாரை எந்நாளும்
            தேவாவியாலே ஆளும்.

4.         அடியார் அத்தியந்த
            பணிவாய்க் கேட்டு வந்த
            நன்மைகளை அன்பாக
            அருளிச் செய்வீராக.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு