பிதாவே ஞானம் அன்பினால்


274. Luther, Erk          (426)   8, 7, 8, 7, 8, 8, 7.

"O Father, all created things"

1.         பிதாவே ஞானம் அன்பினால்
                        அனைத்தையும் படைத்தீர்;
            ஏதேனிலே விவாகத்தால்
                        ஆண் பெண்ணையும் இணைத்தீர்
            அப்பூர்வ ஆசீர்வாதத்தை,
            இல்வாழ்க்கையின் நல்லின்பத்தை
                        இவர்களுக்கும் ஈயும்.

2.         கானா ஊர் விருந்தாளியே,
                        இங்கே ப்ரசன்னமாகும்;
            உம்தன் சம்பூரணத்தாலே
                        குறைவை நிறைவாக்கும்;
            இவர்கள் இக இன்பமே
            பரத்தின் பாக்கியமாகவே
                        நீர் மாறும்படி செய்யும்.

3.         புனித ஆவி தேவரீர்
                        இவர்கள் மேலே ஊதும்;
            உம் தூய்மை அன்பினாலும் நீர்
                        இவர்களைத் தற்காரும்;
            எப்பாவத்துக்கும் நீங்கியே,
            ஒரே சரீரம் போலவே
                        இவர்கள் வாழச் செய்யும்.

4.         த்ரியேகா நீர் கட்டாவிடில்,
                        ப்ரயாசம் வீணே ஆகும்;
            நீர் ஆசீர்வதிக்காவிடில்
                        இன்பமும் துன்பமாகும்;
            உம்மால் இணைக்கப்பட்டோரை
            குன்றாத நேசமுள்ளோரை
                        யார்தான் பிரிக்கக்கூடும்?

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு