ஆ நீதியுள்ள கர்த்தரே


314. Maltland: Luther       (431)   8, 7, 8, 7, 8, 8, 7.

"Ach Herre, du gerechter"

1.           ஆ, நீதியுள்ள கர்த்தரே,
                        வயல் வறண்டதாலே
            எச்சீவனும் வதங்கிற்றே;
                        இக்கேடு எங்களாலே
            நடந்த பாவத்தின் பலன்,
            என்றெங்களில் ஒவ்வொருத்தன்
                        துக்கித்துச் செல்வானாக.

2.         ஆ, எங்கள் மீறுதல்களை
                        இரக்கமாய் மன்னியும்;
            நீரே அடியார் நம்பிக்கை,
                        சகாயத்தை அளியும்;
            கர்த்தாவே, சுத்த தயவால்
            மழையைத் தந்து அதினால்
                        நிலத்தைப் பூரிப்பாக்கும்.

3.         தயாபரா, நீர் உமது
                        நல் வாக்கு நிறைவேற
            காய்ந்து கிடக்கும் பூமிக்கு
                        தண்ணீர் இறைப்பீராக;
            வானுலகாளும் கர்த்தரே,
            மழையை உம்மை அன்றியே
                        ஆர் பெய்யப் பண்ணக்கூடும்?

4.         மூச்சற்ற விக்ரகங்களால்
                        கூடாது; தேவரீரே
            வானத்தைத் திருக்கரத்தால்
                        விரித்தீர்; அதில் நீரே
            அளவில்லாமல் ஆள்பவர்,
            நீரே பிதா, நீர் ரட்சகர்,
                        உம்மாலே யாவும் ஆகும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு