கர்த்தாவே பூதலத்திலே


265. Wareham                    L.M.

"Look down, O God, with pitying..."

1.         கர்த்தாவே, பூதலத்திலே
            உண்டான கேட்டைப் பாருமேன்
            எத்தேசமும் இருளிலே
            இருந்து நீங்கச் செய்யுமேன்.

2.         நீரே மெய்த் தேவன்; மாந்தர்கள்
            வீணான மார்க்கமாகவே
            பொன், வெள்ளி, மண், கல் வீரர்கள்
            தேவர்கள் என்கிறார்களே.

3.         வல்லவரான க்றிஸ்துவே,
            அப்பொய்களை அகற்றுமேன்;
            தெய்வீக வார்த்தையால் நீரே
            துன்மார்க்கத்தை அதட்டுமே.

4.         எல்லாரும் ஏக சித்தமாய்
            மெய்த்தேவனான உம்மையே
            அறிந்து உம்மேல் நேசமாய்
            இருக்கச் செய்யும் கர்த்தரே.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு