நீயே நிலை உனதருள் புரிவாயே


நீயே நிலை

96. (81) காம்போதி                                        ஆதிதாளம்

பல்லவி

                   நீயே நிலை, உனதருள் புரிவாயே,-ஏசு

சரணங்கள்

1.         தூய அர்ச்சயர்கள் சூழ சீயோன் மாமலையில் ஆளும்
            சுந்தரக் கிருபை வாரியே மைந்தர் கட்கனுசாரியே,
            சோபன ஜீவி-மகிமைப்ர,-தாப அரூபி, சொரூபி,
            ஜோதி, ஆதி நீதி ஓதி சுயவல்லமையில் நரர் திரு உரு என வந்த - நீயே

2.         நன்மை நிறை வாகரமே,[1] ஞானப் பிரபாகரமே,
            வன்மைத் தர்ம சாகரமே, வான சுரர் சேகரமே,
            மகிமை வந்தனமே,-அடியார்-துதிகள் தந்தனமே, கனமே,
            வாச நெச ஏசு ராஜ மனுடர்களுடகதி தின அருச்சனை[2] துதி - நீயே

3.         வானும் இகமும் படைத்த, வலுசர்ப்பம் வினை துடைத்த,
            ஞான நன்மைகள் உடைத்த, நரர்க்குக் கிருபை கிடைத்த,
            நய கிருபாலி,-உலகின்-பவம் அறு மூலி, செங்கோலி,
            நாடி, நீடி, தேடி, கூடி, நயம் அருள் அரசன் நீ, தயவுடன் பரிசனி.[3] - நீயே

- வே. சாஸ்திரியார்


[1] உறைவிடமே
[2] பூசனை
[3] சேர்த்துக்கொள்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு