வையகந்தனை நடுத்தீர்க்க இயேசு


வையகந்தன்னை நடுத்தீர்க்க

76.     (127) காபி                                                    ஆதி தாளம்

பல்லவி
                        வையகந்தனை நடுத்தீர்க்க இயேசு
                        வல்லவர் வருகிறார் திருமறைக்கேற்க!

அனுபல்லவி

            பொய்யுலகோர்களின் கண்களும் பார்க்க,
            பொற்பதிதனிற் பரன் சேயரைச் சேர்க்க.                                     - வைய

சரணங்கள்

1.         வானங்கள் மடமடப்போ டொழிந்திடவே,
            மாகிதலம்[1] அதிர்ச்சியாய்த் தானடுங்கிடவே;
            பானுவுன் மதி யுடு அனைத்தும் மங்கிடவே,
            பஞ்சபூதியங்களுந் தானழிந்திடவே.                                        - வைய

2.         முக்கிய தூதனெக்காளமே தொனிக்க,
            முதல் மரித்தோரெல்லாந் தாமெழுந்திருக்க,
            ஆக்கணமுயிருள்ளோர் மறு உருத்தரிக்க,
            ஆண்டவர் வருகிறார், பக்தர்கள் களிக்க.                                 - வைய

3.         யாவரின் சிந்தை செய்கையும் வெளிப்படற்-கு
            இரண்டு புத்தகங்களுந் திறந்தவரவர்க்குப்
            பூவுலகினிலவர் நடந்து வந்ததற்குப்
            புண்ணியனளவுடன் பலனளிப்பதற்கு.                                         - வைய

4.         அடைக்கலன் யேசுவை அறிந்தவர் நாமம்,
            அழிந்திடாதவர்களின் வாழ்வது க்ஷேமம்;
            படைத்திடுவாயிந்தக் கணமுனை, ஷாமம்
            பற்றிடக் கூடுமே திடுக்கெனவே, நம்.                                        - வைய

- ஞா. சாமுவேல்


[1] பூதலம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு