ஐயனே நரர்மீதிரங்கி அருள்


நரர்மீதிரங்கி அருள்

118. (138) செஞ்சுருட்டி                                 ஆதி தாளம்

பல்லவி

                   ஐயனே, நரர்மீதிரங்கி அருள், ஐயனே,

சரணங்கள்

1.         வையங் கெடுக்கப்பட்டு நொய்யு தனாதி! உன்தன்
            துய்ய ஆவியை விடுத்துய்யக் கிருபை புரியும். - ஐய

2.         ஆதத்தின் மக்கள் எல்லாம் போதத் தவிக்கிறார்கள்;
            வேதத் துரைப் பிரகாரம் நீதத்துன் ஆவி தந்தாள். - ஐய

3.         மைந்தர் மடிந்து நர கந்தனில் வீழாதுன்றன்
            மைந்தனின் ஆவியைத் தந் தெந்தவிதமும் காப்பாய். - ஐய

4.         முந்து மனுடருக்குத் தந்த வாக்குத்தத்தத்துன்
            சிந்தை மகிழ்ந்தவர் நிர்ப் பந்தம் தவிர்க்கவேண்டும். - ஐய

5.         ஆகாதவன் மடிந்து சாகா துயர் பிழைக்க,
            வாகாய் அருள் செயும் திரி யேகா; உமக்குத் தோத்ரம். - ஐய 

- வே. சாஸ்திரியார்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு