எத்தனை நாவால் துதிப்பேன்


எத்தனை நாவால் துதிப்பேன்?

108. அமிர்தகல்யாணி                                               சாபு தாளம்

பல்லவி

                   எத்தனை நாவால் துதிப்பேன்-எந்தன்
                   கர்த்தா உன் கருணையைப் பாடிப் புகழ்ந்து.

அனுபல்லவி

            நினைக்க நினைக்க எந்தன் நெஞ்சமெல்லாம் உருகும்,
            நின்னைச் சொல் மாலையால் சூட்டி மகிழும். - எத்தனை

சரணங்கள்

1.         நம்பினோரல்லோ அறிவார்-எந்தன்
            தம்பிரானே உந்தன் கம்பீர குணம்,
            அம்பரா உன் அன்பின் அதிசய நடத்துதல்
            சம்பூரண சவரட்சணை செல்வம். - எத்தனை

2.         பிரார்த்தனை கேட்கும் பெம்மானே-இந்தப்
            பேதை பலவீனம் பாராதருள் கோனே!
            சரணென்றுன் செம்பாத மலரடி சேர்ந்தோர்
            தாவிப் பிடித்துக் கவலை தீர்த்தோனே! - எத்தனை

3.         துணிவாய் என் நெஞ்சே தீவிரமாய்-மிகத்
            தொழுது ஆண்டவன் செயல் நினைந்து,
            எண்ணில் அடங்காது இறைவனின் கிருபை
            விண்ணவன் சேவையில் வீரமாய்ச் செல்லு. - எத்தனை

          - சவரிராயன் ஏசுதாசன்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு