ஏங்குதே என்னகந்தான் துயர்


ஏங்குதே என்னகந்தான்

52. (98) நாதநாமக்கிரியை                                        சாபுதாளம்

பல்லவி

                        ஏங்குதே என்னகந்தான், துயர்
                        தாங்குதில்லை முகந்தான்.

அனுபல்லவி

            பூங்காவிலே கனிந்தேங்கி நீர் மன்றாட‌
            ஓங்கியே உதிரங்கள்
            நீங்கியே துயர் கண்டு - ஏங்குதே

சரணங்கள்

1.         மேசியாவென்றுரைத்து, யூத‌
            ராஜனென்றே நகைத்து,
            தூஷணித்தே அடித்து, நினைக்குட்டி
            மாசுகளே சுமத்தி,
            ஆசாரமின்றியே ஆசாரியனிடம்
            நீசர்கள் செய் கொடும் தோஷமது கண்டு - ஏங்குதே

2.         யூதாஸ் காட்டிக்கொடுக்க, சீமோன்
            பேதுரு மறுதலிக்க‌,
            சூதா யெரோதே மெய்க்க, வெகு
            தீதாயுடை தரிக்க‌,
            நாதனே, இவ்விதம் நீதமொன்றில்லாமல்
            சோதனையாய்ச் செய்யும் வேதனையைக் கண்டு - ஏங்குதே

3.         நீண்ட குரு செடுத்து, எருசலேம்
            தாண்ட மலையெடுத்து
            ஈண்டல்[1] பின்னே தொடுத்து, அவரின்மேல்
            வேண்டும் வசை கொடுத்து,
            ஆண்டவர் கை காலில் பூண்டிடும் ஆணியால்
            மாண்டதினால் நரர் மீண்ட தென்றாலுமே - ஏங்குதே

- தேவசகாயம் எழுத்தர்


[1] கூட்டம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு