ஒரு மருந்தரும் குருமருந்து


அரும் குருமருந்தே

126. (367) மோகனம்                                      ஆதி தாளம்

பல்லவி

                   ஒரு மருந்தரும் குருமருந்-(து)
                   உம்பரத்தில் கண்டேனே.

அனுபல்லவி

            அருள் மருந்துடன் ஆனந்த மருந்து,
            ஆதியிற்றனாய் முளைத்த மருந்து,
            வரும் வினைகளை மாற்றும் மருந்து
            வறுமையுள்ளோர்க்கே வாய்த்த மருந்து. - ஒரு

சரணங்கள்

1.         சிங்கார வனத்தில் செழித்த மருந்து,
            ஜீவதரு மீதில் படர்ந்த மருந்து,
            மங்கை ஏவை பவம் மாற்றும் மருந்து
            வல்ல சர்ப்ப விஷம் மாய்த்த மருந்து. - ஒரு

2.         மோசே முதல் முன்னோர் காணா மருந்து,
            மோட்ச மகிமையைக் காட்டும் மருந்து,
            தேசத்தோர் பிணியைத் தீர்த்த மருந்து,
            தீர்க்கத் தரிசிகள் செப்பிய மருந்து. - ஒரு

3.         தீராத குஷ்டத்தைத் தீர்த்த மருந்து,
            செவிடு, குருடூமை தின்ற மருந்து,
            மானா[1] திருத்துவ மான மருந்து,
            மனுவாய் உலகினில் வந்த மருந்து. - ஒரு

4.         செத்தோரை உயிரோ டெழுப்பும் மருந்து,
            ஜீவன் தவறா தருளும் மருந்து,
            பத்தரைச் சுத்திகரித்திடும் மருந்து,
            பரம வாழ்வினில் சேர்க்கும் மருந்து. - ஒரு

- யோ. பால்மர்


[1] மகிமையுள்ள

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு