பாவம் போக்கும் ஜீவநதியைப்


ஜீவ நதியைப் பாராய்

135. (156) செஞ்சுருட்டி                                 ரூபகதாளம்

பல்லவி

                   பாவம் போக்கும் ஜீவநதியைப்
                   பாரீர், வந்து பாரீர்-பாரில்!

அனுபல்லவி

                        தீவினை தீர்க்கும் தேவமரியின்
                        திருரத்த மிந்த ஆறாம்,-பாரில்! - பாவம்

சரணங்கள்

1.         கல்வாரி மலைச்சிகர மீதுற்றுக்
            கண்கள் ஐந்து திறந்தே;-அதோ!
            மல்கிச் சிலுவை யடியில் விழுந்து
            வழிந்தோடுது பாரீர்,-பாரில்! - பாவம்

2.         பாவச்சுமையால் நொந்து சோர்ந்து
            பதறி விழுந் தலறி-நிதம்
            கூவியழுத அனந்தம் பேரிதில்
            குளித்தே யுளங் களித்தார்,-பாரில்! - பாவம்

3.         பத்தருளத்தி லிடைவிடாமல்
            பாய்ந்து வளமீந்து-அதை
            நித்தமும் பரிசுத்த குணத்தில்
            நிலைநாட்டுது பாரீர்,-பாரில்! - பாவம்

4.         ஒருதரம் இந்த நதியின் தீர்த்தம்
            உண்டோர் ஜீவன் கண்டோர்,-தாகம்
            அறுதி[1] யடைவர்; வேறொருநதிக்
            கலையார், தேடி யலையார்,-பாரில்! - பாவம்

5.         நித்தியந்தனில் கலந்துறையுஞ் செந்
            நீரார் நதியிதிலே-தங்கள்
            வஸ்திரந் தோய்த்த சுத்தர் சபையில்
            வாழ்ந்துகீதம் பாட,-பாவி - பாவம்

- ஜி.சே. வேதநாயகம்


[1] முடிவு

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு