ஆவியை அருளுமே சுவாமீ


ஆவியை அருளுமே

117. (136) காபி                                             ஆதி தாளம்

பல்லவி

                   ஆவியை அருளுமே, சுவாமீ,-எனக்
                   காயுயிர் கொடுத்த வானத்தினரசே!

சரணங்கள்

1.         பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,
            பரம சந்தோஷம், நீடிய சாந்தம்,
            தேவ சமாதானம், நற்குணம், தயவு,
            திட விசுவாசம் சிறிதெனுமில்லை. - ஆவியை

2.         தீபத்துக் கெண்னையைச் சீக்கிரம் ஊற்றும்;
            திரி யவியாமலே தீண்டியே யேற்றும்,
            பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும்,
            பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும். - ஆவியை

3.         நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ?
            நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ?
            முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ?
            முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ? - ஆவியை

- அருளானந்தம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு