வரவேணும் பரனாவியே


வரவேணும் பரனாவியே

119. கரஹரப்பிரியை                             ஆதி தாளம்

பல்லவி

                             வரவேணும் பரனாவியே,
                             இரங்குஞ் சுடராய் மேவியே.

அனுபல்லவி

                        மருளாம் பாவம் மருவிய எனக்கு
                        வானாக்கினியால் ஞான தீட்சை தர, - வர

சரணங்கள்

1.         பலமான எப்பாவமும் பாழாக்கும் மாநோய்களும்
            வலியகொடும் ரோகமும் மாம்சசிந்தை ஓடுமே;
            பலிபீடத்தில் என்னைப் பலியாக வைத்தேன்,
            எலியாவின் ஜெபத்துக் கிரங்கிய வண்ணம். - வர

2.         என்றன் பவம்யாவையும் எரிக்கும்வகை தேடியும்
            எங்கும் இந்த லோகத்தில் எத்தீயுமே காண்கிலேன்;
            என்றன் செயலால் யாதொன்றும் முடியா
            தின்றே வானாக் கினி வரவேணும். - வர

3.         குடிகொள் எந்தப்பாவமும் அடியோடே தொலைந்திடும்,
            தடுத்தாட்கொள்ளும் தோஷமும் சாம்பலாகச் செய்திடும்;
            படிமிசை காற்றுக்குப் பறந்தோடும் சாம்பல்போல்
            அடியேன் ஏசுவுக் கனுதினம்பணி செய்ய, - வர
­­
- வே. சந்தியாகு


Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு