உலகில் பவப் பாரத்தால் சோரும் இளைப்


இளைப்பூர்ந்த நரரே வந்து சேரும்

137. (166) எதுகுலகாம்போதி                                 ஆதி தாளம்

பல்லவி

                   உலகில் பவப் பாரத்தால் சோரும்-இளைப்
                   பூர்ந்த நரரே, வந்து சேரும்.

அனுபல்லவி

            அலைசடிப் பட்டவரே, வாரும்,-என்றன்
            ஆறுதலால் அவற்றைத் தீரும்;-பொல்லா - உலகில்

சரணங்கள்

1.         பாவி என்றெண்ணித் திகைப் போரும்,-என்றன்
            பாவம் தீராதென் றிருப் போரும்,
            ஆவலாய் ஓடி வந்து சேரும்;-நான்
            ஆகாமியர்க்காக வந்த தோரும்;-பொல்லா - உலகில்

2.         இளமை என்றே எண்ணி, நில்லாதே;-சாவும்
            இளமை என்று சொல்லிச் செல்லாதே;
            வளமாய் வருவதைத் தள்ளாதே;-கெட்ட
            வழக்க மிதையே கைக் கொள்ளாதே.-பொல்லா - உலகில்

3.         வாலிப ப்ராய மிதில் நாளும்-இன்ப
            வாழ்வு சுகிக்கவென்று மாளும்
            சீலரே, இன்றென் னுரை கேளும்;-அவை
            சேர்க்கும் நரகத்தில் எந்நாளும்,-பொல்லா - உலகில்

4.         காலம் கடந்த கிழவோரே,-வீணாய்க்
            காலம் கழித்தே உழல்வோரே,
            காலமே தேட மறந்தாரே,-உங்கள்
            கவலையைத் தீர்ப்பேன், அறிவீரே.-பொல்லா - உலகில்

- ஏசுதாசன் சவரிராயன்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு