எத்தனை திரள் என் பாவம்


எளியேன்மேல் இரங்கையனே

163. (181) தன்யாசி                                                 ஆதிதாளம்

பல்லவி

                   எத்தனை திரள் என் பாவம், என் தேவனே!
                   எளியன்மேல் இரங்கையனே

அனுபல்லவி

            நித்தம் என் இருதயம் தீயதென் பரனே;
            நிலைவரம் எனில் இல்லை; நீ என் தாபரமே - எத்தனை

சரணங்கள்

1.         பந்தம் உன்மேல் எனக்கில்லை என்பேனோ?
            பணிந்திடல் ஒழிவேனோ?
            சுத்தமுறுங் கரம்கால்கள், விலாவினில்
            தோன்றுது காயங்கள், தூய சிநேகா! - எத்தனை

2.         என்றன் அநீதிகள் என் கண்கள் முனமே
            இடைவிடாதிருக்கையிலே,
            உன்றன் மிகுங் கிருபை, ஓ! மிகவும் பெரிதே
            உத்தம மனமுடையோய், எனை ஆளும்! - எத்தனை

3.         ஆயங் கொள்வோன்போல், பாவ ஸ்திரீபோல்,
            அருகிலிருந்த கள்ளன்போல்,
            நேயமாய் உன் சரண் சரண் என வணங்கினேன்;
            நீ எனக்காகவே மரித்தனை, பரனே! - எத்தனை

4.         கெட்ட மகன்போல் துட்டனாய் அலைந்தேன்,
            கெடு பஞ்சத்தால் நலிந்தேன்;
            இட்டமாய் மகன் எனப் பாத்திரன் அல னான்,
            எனை ரட்சித்திடல் உன்றன் நிமித்தமே, அப்பனே! - எத்தனை

- த. பலவேந்திரம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு