தேவா திருக்கடைக்கண் பார்


தேவா, திருக்கடைக்கண் பார்

182. (228) செஞ்சுருட்டி                                 ஆதி தாளம்

பல்லவி

            தேவா, திருக்கடைக்கண் பார், ஐயா!
            வினைதீர், ஐயா, வினைதீர், ஐயா.

அனுபல்லவி

            கோவாய் உலகில் வந்த யோவா, சச்சிதானந்தா! - தேவா

சரணங்கள்

1.         மேவிய தயை நிரம்பி, ஆவலுடனே விரும்பி,
            பாவி எனையே திரும்பிப் பார், ஐயா, ஸ்வாமி! - தேவா

2.         பொல்லா உலகம் பகை, எல்லாச் செல்வமும் புகை;
            வல்லா, உனின் கிருபை கூர், ஐயா, ஸ்வாமி. - தேவா

3.         அந்தி சந்தியும் விடாமல், தந்திரப் பசாசடாமல்,
            எந்த விதமும் கெடாமல் ஆளுமே, ஸ்வாமி! - தேவா

4.         சர்ப்பனை[1] யதாய் உலகம் இப்படித் துரோகம் செய்தால்,
            எப்படி அடிமை கரை யேறுவேன், ஸ்வாமி! - தேவா

5.         எத்தனை துயர் அடைந்தேன்! மெத்தவும் மன துடைந்தேன்;
            சித்தம் இரங்காய், என் மணவாளனே, ஸ்வாமி! - தேவா

6.         இந்தத் தினத்தில் எனக்குத் தந்த சுகத்துக்குனக்கு
            வந்தனம்! அனந்தனந்தம் ஸ்தோத்திரமே, ஸ்வாமி! - தேவா

- வே. சாஸ்திரியார்


[1] வஞ்சகம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு