சேர் ஐயா எளியேன் செய் பவ வினை


சேர் ஐயா

168. (189) சங்கராபரணம்                                         ஆதி தாளம்

பல்லவி

            சேர், ஐயா; எளியேன் செய் பவ வினை
            தீர், ஐயா.

சரணங்கள்

1.         பார், ஐயா, உன் பதமே கதி;-ஏழைப்
            பாவிமேல் கண் பார்த்திரங்கி,-எனைச் - சேர்

2.         தீதினை உணர்ந்த சோரனைப்-பர
            தீசிலே அன்று சேர்க்கலையோ?-எனைச் - சேர்

3.         மாசிலா கிறிஸ் தேசுபரா,-உனை
            வந்தடைந்தனன்; தஞ்சம், என்றே-எனைச் - சேர்

4.         தஞ்சம் என்றுனைத் தான் அடைந்தோர்-தமைத்
            தள்ளிடேன் என்று சாற்றினையே;-எனைச் - சேர்

5.         பாவம் மா சிவப்பாயினும்,-அதை
            பஞ்செனச் செய்வேன், என்றனையே;-எனைச் - சேர்

6.         தீயர்க்காய்ப் பிணையாய் மரித்த-யேசு
            தேவனே, கருணாகரனே,-எனைச் - சேர்

- யோ. பால்மர்


Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு