வேளை இது சபையே நித்திரையை


வேளை இது சபையே

146. (9) பைரவி                                   ஆதி தாளம்

பல்லவி

                        வேளை இது சபையே-நித்திரையை
                        விட்டுஎழுந்திருக்க-நல்ல.

அனுபல்லவி

            நாளைக்கு இன்னொருவேளைக் கென்றெண்ணாமல்
            காலத்தைத் தப்பாமல் கைகுட்பிடித்திட. - வேளை

சரணங்கள்

1.         நாம் விசுவாசிகளாய்த்-திரும்பின
            நல்வேளை தன்னிலுமே,
            ஆமீ துநல்வேளை ஐயனின் ரட்சிப்பு
            அண்டையிற்கிட்டிய தென்றறிந்தோமல்லோ. - வேளை

2.         பாவஇருள்விடுத்தோம்,-பகலதுக்
            கான வொளியடுத்தோம்;
            மேவுமந்தகார வேஷக்கிரியையை
            விட்டுவெளிச்சப் பேராயுதம் பூண்டிட. - வேளை

3.         தானவனாலயமே-உன்தனுட
            சரீரமும் ஆத்துமமும்
            நானிலமீதேசு நாயகர்க்கேற்காமல்
            மேனியைப்பேணும் விருப்பமாகாது. - வேளை

4.         கத்தரினாலயத்தைக்-கொடுப்போனைக்
            கர்த்தர் கெடுப்பதல்லால்
            நித்தியதேவ கோபாக்கினைக்காளாகி
            நீடூழியும் நரகாழியில் வேவானே. -வேளை

- சு. முத்துசாமி

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு