நம்பிவந்தேன் மேசியா நான் நம்பிவந்தேனே


நம்பி வந்தேன்

196. (247) செஞ்சுருட்டி                          ஆதி தாளம்

பல்லவி

          நம்பிவந்தேன் மேசியா, நான் நம்பிவந்தேனே,-திவ்ய
          சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான் நம்பிவந்தேனே.

சரணங்கள்

1.         தம்பிரான் ஒருவனே, தம்பமே[1] தருவனே;-வரு
            தவிது குமர குரு பரமனுவேலே, நம்பிவந்தேனே. - நான்

2.         நின்பாத தரிசனம் அன்பான தரிசனம்;-நித
            நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் நம்பிவந்தேனே. - நான்

3.         நாதனே, கிருபைகூர்; வேதனே, சிறுமைதீர்;-அதி
            நலம் மிகும் உனதிரு திருவடி அருளே நம்பிவந்தேனே - நான்

4.         பாவியில் பாவியே, கோவியில் கோவியே,[2]-கன
            பரிவுடன் அருள்புரி, அகல விடாதே; நம்பிவந்தேனே - நான்

5.         ஆதி ஓலோலமே,[3] பாதுகா காலமே-உன
            தடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த; நம்பிவந்தேனே - நான்

- வே. சாஸ்திரியார்



[1] பற்றுக்கோடு
[2] கோபம் உள்ளவன்
[3] ஒலி (திருவார்த்தை)

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு